close
Choose your channels

விக்ரம், ஜெயம் ரவியை அடுத்து 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்த நடிகர்!

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் கார்த்தி, த்ரிஷா உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் இந்த படத்தில் தங்களுடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகி நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த ரகுமானும் தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்னுடைய பகுதியின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்த அருமையான பயணத்தில் எனக்கு மிகச்சிறந்த அனுபவங்கள் கிடைத்தது. மணிரத்னம் அவர்களிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். தற்போது இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மதுராந்தகர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.