close
Choose your channels

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற நிலையில் தற்போது அவர் தமிழக ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். அங்கு அவர் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் மறுநாளே அவர் சென்னை திரும்பிவிட்டார். மேலும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆந்திராவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே டெல்லிக்கு அவர் ஏன் சென்றார் என்பது குறித்த காரணம் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. இருப்பினும் தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது ஏன் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவராமல் இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  காஷ்மீரில் பிறந்து வளர்ந்த ஆர்.என். ரவி அவர்களுக்கு தமிழகம் மிகவும் பிடித்துள்ளதாகவும், குறிப்பாக ஆன்மீக பூமியில் வாழும் தமிழக மக்களை மிகவும் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக ரஜினிகாந்த் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.