தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் அவருக்கு திரை உலகம் மற்றும் அரசியல் உலகில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து விஜய் சேதுபதி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்

இந்த நிலையில் விஜய்சேதுபதி ’800’ படத்தில் நடிப்பதால் ஆத்திரமடைந்த நெட்டிசன் ஒருவர் அவருடைய மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பிரபல நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல...

இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று, வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது... தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்..

இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

More News

ஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா!

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதள பாதாளத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்று என்பது ப்யூஸ் போன பல்பூ ஒளிரும் ...

இந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு,

போதை பொருள் விவகாரம்: பிக்பாஸ் போட்டியாளர் உள்பட 2 நடிகைகள் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும்

எலிசபெத்திடம் வருத்தம் தெரிவித்த வனிதா: வைரலாகும் வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவிஜயகுமாருக்கு திருமணம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்,

நடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது.