close
Choose your channels

யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாத நடிகர்: அஜித்துக்கு தந்தையாக நடித்த நடிகர் பாராட்டு

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினமும் ஊடகங்களில் அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலருடைய அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அறிக்கைகள் எல்லாம் ஊடகங்களில் ஒரு ஓரத்தில் பெட்டி செய்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான அஜித்தின் அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியது. இந்த செய்தியை வெளியிடாத ஊடகமும், கருத்து சொல்லாத பிரமுகர்களும் இல்லை என்ற அளவுக்கு அஜித்தின் ஒரே ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அஜித் நடித்த 'கிரீடம்' படத்தில் அவருக்கு தந்தை கேரக்டரில் நடித்த நடிகர் ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் 'யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித்' என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அவருடைய சமூக வலைத்தள பதிவு:

எந்த விதமான முகமூடிகளையும்
அணிந்து கொண்டு, யாரையும்
ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல்,
தன் உழைப்பை மட்டுமே நம்பி,
யாரிடமும் எவ்வித பாகுபாடும்
பார்க்காமல், எல்லோரையும் சமமாக
பாவித்து, நேசித்து, அவரவர்க்கு
உரிய கடமைகளை உணர்த்தி,
மனித நேயராக வாழும்
அன்புத்தம்பி அஜித்.
வாழ்க வாழ்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.