ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இதுதான். ராஜ்கிரண் கூறும் நிதர்சன உண்மை

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

உலகில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நார்வே உள்பட பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பலமுறை முயற்சி செய்தும் இன்னும் தீராத பிரச்சனையாக உள்ளது. தமிழகத்தில் கூட ஈழத்தமிழர்களுக்காக போராடுவதற்கேன்றே பல கட்சிகள் உதயமாகியுள்ளன.
இந்த நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நடிகர் ராஜ்கிரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஈழத்தமிழர் பிரச்சனை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பேசி முடிக்கும் சாதாரண பிரச்சனை அல்ல. இதுவொரு உலக அளவிலான அரசியல். இந்தியாவும் சிங்கள அரசும் இணைந்து சுமார் ஒண்ணேமுக்கால் லட்சம் தமிழர்களை அழித்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை சித்ரவதை செய்தனர். இன்னும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. உலகில் எங்குமே நடக்காத கொடூரம் அங்கு நடந்துள்ளது.
இந்தியா இறையாண்மை உள்ள நாடு என்பது இந்த விஷயத்தில் காப்பாற்றப்படவில்லை. இந்தியாவும் இணைந்துதான் இந்த கொடூரத்தை செய்தது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்பாடு. இந்த விஷயத்தில் நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும், நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே தவிர இதற்கான எந்த முயற்சியும் நம்மால் செய்ய முடியாது. இறைவன் ஒருவன் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும்
ஈழத்தமிழர்களுக்காக கட்சி ஆரம்பிப்பது, கூட்டத்தில் பேசுவது என்பது அனைத்துமே ஒரு நாடகம். இந்த பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனை என்று தெரிந்தும் ஒருசிலர் அவர்களுடைய கட்சியை பலப்படுத்தி கொள்வதற்காகவும், சுயலாபத்திற்காகவும், சுய சம்பாத்தியதிற்காகவும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். ஈழத்தமிழர்கள் பிரச்சனை அவர்களுடைய முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவுமே தவிர அவர்களால் ஈழமக்களுக்கு எந்தவித உதவியும் இருக்காது' என்று கூறினார்.
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த ராஜ்கிரணின் நிதர்சணமான இந்த கருத்தை அனைவரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

More News

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னையும் விஜய்யையும் இணைத்து இயக்க தகுதியுள்ள ஒரே இயக்குனர் இவர்தான். மகேஷ்பாபு

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய்.

சூர்யா, கார்த்தி, யுவன் என்னுடைய வகுப்பு தோழர்கள். சொல்வது ஒரு சூப்பர் ஸ்டார்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.

விஜய்-மகேஷ்பாபு நடிப்பில் 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் திட்டம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'ஸ்பைடர்' என்பதை நேற்று பார்த்தோம்.

அஸ்வின் இந்தியர், விவசாயிகள் மட்டும் தமிழர்களா? நிருபரை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.