சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த தனுஷ்- நயன்தாரா பட நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]


சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் காரைக்குடி படப்பிடிப்பு முடிவடைந்தது என இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சரண்சக்தி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’வடசென்னை’ நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது