close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிகர் செந்தில்: வைரல் புகைப்படம்!

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில் என்பது தெரிந்ததே. குறிப்பாக கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்பதும் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் செந்தில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதும் இருப்பினும் சூர்யா நடித்த ’தானா சேர்ந்த கூட்டம்’ உள்பட ஒருசில படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த படத்தில் நடிகர் செந்தில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குனர் சுரேஷ் சங்கையா தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.