close
Choose your channels

திருடர்களிடம் மல்லுக்கட்டிய பிரபல நடிகை.. வாக்கிங் சென்றபோது விபரீதம்!

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் நடிகை ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். இதனால் அந்த நடிகைக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தெலுங்கில் A Ranyamlo, O Pilla Nee Valla போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலு சௌரஷியா. இவர் நேற்றிரவு ஹைத்ராபாத்தில் உள்ள கேபிஆர் பூங்காவில் ஜாக்கிங் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் இரண்டுபேர் நடிகை ஷாலுவை வழிமறித்து பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகையை அந்த கொள்ளையர்கள் திடீரென கற்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இதனால் தாக்கப்பட்ட நடிகை ஷாலு சௌரஷியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக பஞ்சாரா ஹில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.