close
Choose your channels

சூர்யா-பாலாவின் ‘வணங்கான்’ டிராப்பா? பரபரப்பான தகவலை கூறிய நடிகர்!

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சூர்யா - பாலா இணைந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் ‘வணங்கான்’ படம் டிராப் ஆகி விட்டதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒரு கதையில் சூர்யா நடிக்க பாலா இயக்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர் ஷிஹான் ஹூசைனி இது குறித்து கூறிய போது, ‘வணங்கான்’ படம் டிராப் இல்லை என்றும் இந்த படத்தின் அடுத்தகட்ட விரைவில் தொடங்க இருப்பதாகவும் தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ள ஷிஹான், ‘வணங்கான்’ டிராப் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கண்டிப்பாக விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos