எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்: சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

திரையுலக பிரபலங்கள் பலர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எத்தனை கோடி கொடுத்தாலும் குறிப்பிட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கொள்கை முடிவை நடிகர் சிம்பு எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

முன்னணி மது தயாரிப்பு நிறுவனமொன்று சிம்புவை அணுகி தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க கோரியதாகவும் அதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் மது விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சிம்பு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிம்பு, தான் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் முழுக்க முழுக்க சைவத்துக்கு மாறி விட்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இந்த அதிரடி முடிவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

அந்த கதை சூர்யாவுக்கு மட்டும் தான்.. அவருக்காகவே எழுதினேன்: லோகேஷ் கனகராஜ்

அந்த கதை அவருக்காகவே எழுதியது என்றும் அதில் சூர்யா கண்டிப்பாக விரைவில் நடிப்பார் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி-ஷங்கரின் 'சிவாஜி' இரண்டாம் பாகமா? ஏவிஎம் சூப்பர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் 'சிவாஜி'. இந்த திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவேன்: நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு!

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தளபதி விஜய்யின் 'வாரிசு': படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும்

3 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர்ஹிட் படம்: ஷங்கருக்கு நன்றி சொன்ன சரத்குமார்!

 சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ள நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர்களுக்கு