close
Choose your channels

மாநாடு வெற்றிக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் சிம்பு!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த “மாநாடு“ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது. இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு புதிய படத்திற்காக இயக்குநர் ராமுடன் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. “கற்றதுதமிழ்“, “தரமணி“, “தங்கமீன்கள்“, “பேரன்பு“ போன்ற அழுத்தமான திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். இவர் பேரன்பு திரைப்படத்திற்குப் பிறகு நிவின்பாலி மற்றும் நடிகை அஞ்சலி நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். தனுஷ்கோடியில் துவங்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் ராம் உருவாக்குவார் என்றும் தகவல் தற்போது கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சிம்பு தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காதல்“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர “பத்துத்தல“, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் சிம்பு இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.