ஒரே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற டி.ராஜேந்தர்-சிம்பு

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

பிரபல இயக்குனரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தரும் அவருடைய மகனும் நடிகருமான சிம்புவும் ஒரே நேரத்தில் பதவியுயர்வு பெற்றுள்ளனர். அதாவது டி.ராஜேந்தர் தாத்தாவாகவும், சிம்பு மாமாவாகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
டி.ராஜேந்தரின் ஒரே மகளும் சிம்பு, குறளரசனின் சகோதரியுமான தமிழ் இலக்கியாவின் திருமணம் 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் வெகுசிறப்பாக நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமான தமிழ் இலக்கியா நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. பேரன் பிறந்த தகவல் அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்த டி.ராஜேந்தர் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதேபோல் அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன் மற்றும் குறளரசன் ஆகியோர்களும் தங்கள் குடும்பத்தின் புதுவரை வரவேற்று கொண்டாடினர்.

More News

தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு யாருக்கு? ரஜினிகாந்த் அறிவிப்பு

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் காரணமாகவே ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவதுண்டு.

'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன...