கொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது இன்றும் கூட தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான தீவிரமான போரில் ஈடுபட்டிருக்கும் தமிழக அரசுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சூர்யா-கார்த்தி, ரஜினி மகள் செளந்தர்யா, அஜித், வைரமுத்து, ஏஆர் முருகதாஸ் உள்பட பலரும் கொரோனா நிவாரண நிதியாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.