சிவகுமாரின் மற்றொரு பிரமிக்க வைக்கும் சமூக சேவை

  • IndiaGlitz, [Saturday,April 23 2016]

நடிகர் சிவகுமாரின் குடும்பம் கலைக்குடும்பம் மட்டுமின்றி சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் குடும்பம் என்பது தமிழகமே அறிந்ததுதான். அகரம் பவுண்டேஷன் மூலம் எண்ணற்ற குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சுற்றுப்புற தூய்மையிலும் தற்போது இந்த குடும்பம் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த ஓவியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சுவர்களில் சுமார் 1000 மாணவர்களுடன் இணைந்து சிவகுமார் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து வருகிறார். சிவகுமாரின் மகளும் ஓவியக்கலை பயின்றவருமான பிருந்தாவும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் சுமார் நான்கு மணி நேரம் சிவகுமார் தனது குழுவினர்களுடன் இணைந்து ரயில் நிலைய சுவர்களை பாதுகாக்கும் வகையிலும் கண்களுக்கு குளுமையை ஏற்படுத்தும் வகையில் செய்த இந்த சமூக பணியை பலரும் பாராட்டு வருகின்றனர். சிவகுமாரின் இந்த சீரிய முயற்சிக்கு நமது சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

More News

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மாதவன்

'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரீஎண்ட்ரி ஆன திரைப்படம் 'இறுதிச்சுற்று'...

விஜய்யுடன் பாண்டியராஜன் - பிரித்வி சந்திப்பு

இளையதளபதி விஜய் சமீபத்தில் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை அடுத்து விரைவில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்...

கபாலி ரிலீஸ் எப்போது? தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...

ஐரோப்பிய நாடுகளின் பிளாக்பஸ்டர் ஆனது 'தெறி'

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி....

ரஜினியின் '2.0'வில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது....