செல்பி எடுத்த இளைஞருக்கு புது போன் வாங்கி கொடுத்த சிவகுமார்

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது அவரை செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயற்சி செய்தார். ஆனால் அந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ய, முதலில் விளக்கம் தெரிவித்த சிவகுமார் அதன்பின்னர் வருத்தம் தெரிவித்தார். மேலும் அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்கவும் சம்மதித்தார்.

இந்த நிலையில் ரூ.21ஆயிரம் விலையில் சிவகுமார் வாங்கிய புதிய செல்போன் மதுரையில் உள்ள அந்த இளைஞரிடம் நேரில் சிவகுமார் சார்பில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கூறிய ராகுல் என்ற அந்த இளைஞர் 'சிவகுமார் அவர்கள் தனக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்ததாகவும் அதற்கு தான் நன்றி கூறி கொள்வதாகவும் கூறினார். இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.