close
Choose your channels

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர்!

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் காரணமாக மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீஷியன் ஒருவரின் 4 பெண் குழந்தைகளை பிரபல நடிகர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் இருந்த போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவி செய்தவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கும், ஏழ்மையில் இருந்த பலருக்கும் அவர் உதவி செய்தார் என்பதும், தெலுங்கானா மாநிலத்தில் அவருக்கு பொதுமக்கள் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவருடைய சமூக சேவை தற்போது மேலும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீசியன் ஆலம்சிங் என்பவரின் 4 பெண் குழந்தைகளையும் நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அந்த நான்கு பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நான்கு பெண் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.