close
Choose your channels

புயல் பாதித்த பகுதியிலேயே தங்கி நிவாரண உதவி செய்யும் சூரி

Thursday, November 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சிதைத்து அவர்களுடைய வாழ்வாதாரங்களை நொறுக்கி தள்ளியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் புயல் பாதித்த மக்களுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும், குறிப்பாக திரையுலகினர்களிடம் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் சூரி சமீபத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவியை வழங்கினார். புயல் பாதிப்பு பகுதியைச் சேர்ந்த மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்றறிய, மக்களோடு மக்களாக அரசு பள்ளியில் சூரி தங்கினார். கொசுக்கடி, குளிர் பாராமல் தஞ்சை மாவட்டம், செருவாவிடுதி அரசுப் பள்ளியில் இரவு முழுக்க தங்கி அந்த பகுதி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த நடிகர் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சூரி உதவி செய்த இந்த தகவலை 'கத்துக்குட்டி' இயக்குனர் இரா.சரவணன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.