ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய பிரபல காமெடி நடிகர்.. வைரல் செல்பி!!!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாவும் நடித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி உள்ளார். அப்போது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழாவை சிறப்பித்து உள்ளார். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான நோட், பள்ளி எடுத்துச் செல்லும் பேக், உண்டியல் போன்ற அத்யாவசிய பொருட்களையும் அவர் பரிசளித்தார். மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடி நடனம் ஆடி அவர்களையும் மகிழ்வித்து உள்ளார்.

அப்போது குழந்தைகளுடன் உரையாடிய நடிகர் சூரி, நீங்கள் எல்லோரும் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று தனது யதார்த்தமான பேச்சால் அவர்களுக்கு அறிவுரையும் கூறினார். பொங்கல் விழாவை ஒட்டி நடிகர் சூரி செய்த இந்தச் செயல் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. மேலும் அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க இருந்ததையும் புகைப்படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

More News

105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு கிடைத்த மொத்த தொகை இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வெற்றிபெற்றவர் பாலாஜி என்பதும் இவர் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே

24 பேரை காவு வாங்கிய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி சென்னையில் கைதா?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி விஷச்சாரயம் அருந்தி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொய்ப்பணத்தை இப்படியும் வசூலிக்கலாமா? அசத்தும் புது ஜோடி!!!

மாமன் சீர் மாதிரி மொய்ப்பணமும் ஒருவரின் கவுரவத்தையே எடுத்துக் காட்டுகிறது

பிக்பாஸ் போட்டியாளர்களின் வருமானம் எவ்வளவு? 106 நாட்கள் இருந்த பாலாவுக்கு இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்கள் நடந்து நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே.

விஷ்ணு விஷாலின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கம்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது