பிரியாவிடை பெறுகிறேன்: படப்பிடிப்பு முடிந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்த சூரி!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தை ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்றும் தெரிந்தது. இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக சூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்...

நிவின்பாலி, அஞ்சலி, சூரி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் படமாக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரசாந்த் உடன் நடித்த வீடியோவை நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அமித்ஷாவின் 'இந்தி' பேச்சுக்கு 'பீஸ்ட்' பட வசனம் மூலம் பதிலடி தந்தாரா விஜய்?

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்: ரசிகர்கள் அசத்தல்

 'பீஸ்ட்'  படம் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆலியா பட்- ரன்பீர் கபூரின் திருமணம் ஒத்திவைப்பா? என்ன காரணம்?

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் காதலித்து வருவதும், இந்த காதல் ஜோடிகளின்

'பீஸ்ட்' ரிலீஸ்: விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த அஜித் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்து இந்த படத்தின் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது