close
Choose your channels

என் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்? தமிழ் நடிகர் ஆச்சரியம்

Thursday, August 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் மனதில் தோன்றியதை டெலிபதி மூலம் உணர்ந்து தளபதி விஜய் செடி நட்டார் என்று தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகேஷ்பாபுவின் பிறந்தநாள் சேலஞ்ச்சை ஏற்று தளபதி விஜய் சமீபத்தில் மரக்கணு நட்டு அசத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜய் க்ரீன் இந்தியா சேலஞ்சிற்காக செடி நட்ட அதே நாளில் தமிழ் நடிகர் சௌந்தர்ராஜன் 1000 மரக்கன்றுகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு 'மண்ணுக்கும் மக்களுக்கும்' என்ற சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகர் செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில்’என்னுடைய பிறந்த நாளில் நான் மரக்கன்றுகளை நட்ட அதே நேரத்தில் தளபதி விஜய் அவர்களும் மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று செடி நட்டது, நான் என்ன நினைத்தேனோ அதை அவர் டெலிபதியில் உணர்ந்து செய்தது போல் இருந்தது’ என்று கூறியுள்ளார். நடிகர் செளந்திரராஜனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.