close
Choose your channels

30 ஆண்டுகளாக திரையுலகில் இருந்த குணச்சித்திர நடிகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

Sunday, May 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளாக குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றியதால் 'சூப்பர் குட் சுப்பிரமணி' என்று அழைக்கப்பட்ட நடிகர் சுப்பிரமணி, கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் நிதி உதவி செய்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் 11ஆம் வகுப்பு, மகன் 9ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment