விஜய்மில்டனுக்கு சூர்யா செய்த உதவி

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

கோலிவுட்டின் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், 'கோலி சோடா' என்ற படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனர் என்பதையும் நிரூபித்தார். வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ.3 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியது.
இந்நிலையில் விஜய் மில்டனின் அடுத்த படமான '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள 'கடுகு' படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.
விஜய்மில்டனின் முந்தைய படத்தின் தோல்வி காரணமாக விநியோகிஸ்தர்கள் 'கடுகு' படத்தை வாங்கி வெளியிட தயங்கிய நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது இந்த படத்தை வெளியிட முன்வந்துள்ளது. விஜய்மில்டன் தனது நீண்ட கால நண்பர் என்பதாலும், அவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்த சூர்யா இந்த படத்தை வெளியிட முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா, ஜோதிகா நடிக்காத படத்தை 2D நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ராஜகுமாரன் புலி வேஷம் போடும் கலைஞராகவும், பரத் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளனர்.

More News

சின்மயி கணவருக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டதை பார்த்த்தோம்.

இளையதளபதியின் 'விஜய் 61' படத்தில் ஷங்கர் பட வில்லன்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'விஜய் 61'

ஜி.வி.பிரகாஷின் 'நெடுவாசல்' பாடலின் ஆரம்பம் இதுதான்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் எழுச்சி அடைய வைத்தவைகளில் ஒன்று ஜி.வி.பிரகாஷின் 'இது கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடல் என்றால் அது மிகையாகாது.

சுசித்ராவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

கடந்த ஒரு வாரமாகவே சுசித்ராவின் டுவிட்டர் மேட்டர் இணையதளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது.

சுசித்ரா பிரச்சனை குறித்து செல்வராகவன் அளித்த விளக்கம்

சுசித்ராவின் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் தளம் கோலிவுட் திரையுலகில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிட்ட நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பிரபலங்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.