close
Choose your channels

ரசிகர் மன்ற செயலாளரின் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா: வைரல் ஆடியோ

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தனது ரசிகர் மன்ற செயலாளர் மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்ததை அடுத்து இதுகுறித்து அவர் வாழ்த்து தெரிவித்த ஆடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா மதுரை மாவட்டம் ரசிகர் மன்ற செயலாளர் மனோஜ் என்பவரின் மனைவி தீபிகாவின் மேல்நாட்டு படிப்பு ஆசையை தனது அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். அகரம் தொண்டு நிறுவனம் சார்பில் அயர்லாந்து நாட்டிற்கு மேல்படிப்பு படிக்க தீபிகா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு காரணமாக தீபிகாவை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வர முடியாததால் தொலைபேசி மூலம் தீபிகாவுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. சாப்ட்வேர் இஞ்சினியரான தீபிகா, அயர்லாந்து சென்று மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவருடைய ஆசையை சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.

இதனையடுத்து அயர்லாந்து கிளம்ப தயாராக இருந்த தீபிகாவுக்கு தொலைபேசியில் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். குடும்பமும் முக்கியம் அதே சமயம் தொழிலும் முக்கியம் என்றும் நன்றாக படித்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் வாழ்த்துக்கு நன்றி நன்றி தெரிவித்துக் கொண்ட தீபிகா, ஜோதிகா மற்றும் குழந்தைகளை தான் கேட்டதாகவும் கூறினார். இந்த உரையாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.