close
Choose your channels

'தேவர் மகன்' வசனத்தை கமல்ஹாசனுக்கு நன்றியாக கூறிய சூர்யா!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ’ஜெய்பீம்’ படத்தை பார்த்து கமல்ஹாசன் இன்று பாராட்டு தெரிவித்த நிலையில் அவருக்கு அவருடைய வெற்றிப்படங்களில் ஒன்றான தேவர்மகன் படத்தின் வசனத்தை கூறி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இன்று காலை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ’ஜெய்பீம்’ படத்தை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா-ஜோதிகா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியிருந்ததாவது:

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் பாராட்டுக்கு தனது நன்றியை தெரிவித்த சூர்யா கூறியதாவது: ‘நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

’விதை நான் போட்டது என்று தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய பிரபலமான வசனம் என்பதும் அந்த வசனத்தை வைத்து அவருக்கு சூர்யா நன்றி கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.