குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘சூர்யா 44’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி சூர்யா மேற்கொண்டு வருவதால் இந்த படத்தில் குதிரை காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் சஸ்பென்ஸ் மற்றும் திகில் படம் என்றும் கூறப்பட்ட நிலையில் குதிரை இந்த படத்தின் திரைக்கதையில் எப்படி வருகிறது என்பதை புரியாத புதிராக உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கார்த்திக் சுப்புராஜ் ஏதோ பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் சூர்யாவை வைத்து சம்பவம் செய்யப் போகிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இன்று சனி மகா பிரதோஷம்: ஈசனை வழிபட்டு நன்மைகள் பெறுங்கள்!

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படும்.

வேலை கிடைக்க வேல் வழிபாடு⚜️: ஜோதிடர் சீதா சுரேஷ் ரகசியம் மற்றும் வேல் மாறல் மந்திரம்

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஒடுக்கத்தூர் மகான் பற்றியும், அவரது அற்புதங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

'இந்தியன் 2' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்.. இன்று கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 'இந்தியன் 3' படப்பிடிப்பு நடந்து

ஒரே படத்தில் பகத் பாசில் மற்றும் எஸ்.ஜே.சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக மல்டி ஸ்டார் திரைப்படங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 'விக்ரம்' 'ஜெயிலர்' உட்பட பல மல்டி ஸ்டார்

'வேட்டையன்' இயக்குனரின் அடுத்த பட நாயகன் இவரா? வேற லெவல் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.