1080 ஏக்கர் கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் 1080 ஏக்கர் நிலத்தை தத்து எடுத்த நிலையில் தத்தெடுக்க அனுமதி அளித்த அரசுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா என்பதும் அவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும்போது தெலுங்கானா மாநிலத்தில் 1080 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்து அதில் தனது தந்தையின் நினைவாக பூங்கா ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அவர் கேட்ட நிலத்தை தெலுங்கானா மாநில அரசு தற்போது அளித்துவிட்டது. இதனை அடுத்து 1080 ஏக்கர் நிலத்தை தத்துக் கொடுத்த தெலுங்கானா அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட நாகார்ஜுனா, இந்த இடத்தில் தனது தந்தை நாகேஸ்வரராவ் நினைவாக பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா உள்பட பலர் உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெத்சல் என்ற மாவட்டத்தில் அமைய உள்ள இந்த பூங்கா மிகச் சிறந்த சுற்றுலா தலமாக எதிர்காலத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமன்னாவின் அடுத்த படம் குறித்த தகவல்: டைட்டில் அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்த 'ஆக்சன்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும் அதன் பிறகு அவர் தெலுங்கு மற்றும் இந்தியில்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் அடுத்த படத்தில் இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 'வலிமை' படத்தை பார்க்கும் பிரபலம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சமந்தா: வீடியோ வைரல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் தொடர்ந்து மூன்று நாட்கள்

பட்ஜெட் அதிகமாக நான் காரணமா? விளக்கமளித்த 'கோப்ரா' இயக்குனர்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய 'கோப்ரா' திரைப்படம் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து இயக்குனர் அஜய்