நீதிபதி மகன் தாக்கப்பட்ட விவகாரம்: நடிகர் தர்ஷன் வழக்கில் முக்கிய திருப்பம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விவேகம் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தர்ஷன் வீட்டின் முன், நீதிபதியின் மகன் காரை நிறுத்திய நிலையில், அந்த காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது.
இதில் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அதே நேரத்தில், தர்ஷன் கொடுத்த புகாரின் பேரில், நீதிபதி மகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இரு புகார்களின் அடிப்படையில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிபதியின் மகன் மற்றும் தர்ஷன் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததால், இருதரப்பினரும் மனுக்களை வாபஸ் பெற்றதாகவும், இதையடுத்து இரு புகார்களினால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com