அஜித் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவேன். பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் உள்பட பிற மொழி படங்கள் டப் செய்து கர்நாடகாவில் வெளியிட கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் படங்கள் வெளியிடும் திரையரங்குகள் முன் அவ்வப்போது ஆர்ப்பாட்டமும் நடந்தது உண்டு.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றி படமான 'என்னை அறிந்தால்' திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு 'சத்யதேவ்' என்ற பெயரில் இன்று கர்நாடகத்தில் வெளியாகிறது.

ஆனால் டப்பிங் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு குழுவினர் இன்று சத்யதேவ்' வெளியாகும் திரையரங்குகள் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் என்பவர், 'சத்யதேவ்' படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் இம்மாதம் 11-ஆம் தேதி இதற்காக பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

அஜித்-அக்சரா குறித்து ஸ்ருதிஹாசன் கூறியது என்ன?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்...

பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி,.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்...

நயன்தாராவின் 'டோரா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திகில் படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு திகில் படம் 'டோரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ஆகியவை முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

சேவ் சக்தி'யின் நோக்கம் என்ன? நடிகை வரலட்சுமி விளக்கம்

பிரபல நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார்.

ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்