close
Choose your channels

நாம் அனைவருமே குற்றவாளிகள்: சுஜித் மரணம் குறித்து உதயநிதி

Tuesday, October 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமட்த்தை சேர்ந்த சிறுவன் சுஜித் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த சிறுவனுக்காக அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவனுக்கு இரங்கலும் அவனுடைய பெற்றோர்களுக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சுஜித்தின் மரணம் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாலருமான உதயநிதி கூறியபோது, ‘சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். 'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள். என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.