காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 'இந்தியன்' பட நடிகை!

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘இந்தியன்’ திரைப்படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவர் ஊர்மிளா.

நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பும் கொடுத்தது. ஆனால் கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஊர்மிளா தோல்வி அடைந்தார். தனக்கு மும்பை காங்கிரஸாரிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் தோல்வி ஏற்பட்டது என்ற அதிருப்தியில் இருந்த ஊர்மிளா சற்றுமுன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை காங்கிரசில் நிலவும் உள்கட்சி அரசியலை எதிர்த்து போராட விரும்பாததால் ராஜினாமா செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை நடிகை ஊர்மிளா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஊர்மிளா ஐந்து மாதங்கள் மட்டுமே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரொம்ப தவறு கவின்! சேரன் எழுதிய கடிதம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சேரன் வெளியேறினாலும் அவர் தற்போது சீக்ரெட் அறையில் உள்ளார். சேரன் சீக்ரெட் அறையில் இருப்பது போட்டியாளர்களுக்கு இதுவரை தெரியாது.

ஜிவி பிரகாஷ் பட டைட்டிலை வெளியிடும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்!

ஜிவி பிரகாஷின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் சூப்பர் ஸ்டாரை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து

லாஸ்லியாவுக்காக சாண்டியுடன் மோதுகிறாரா கவின்?

கவின், சாண்டி இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நெருங்கிய நண்பர்கள். ஐந்து வருடங்கள் நட்பாக இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருவர் தலைமையில் சீக்கிரமாக ஒரு கேங் உருவானது

சென்னை வந்ததும் முகின் தாயார் பார்த்தது யாரை தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்களின் வருகை வாரம் என்ற நிலையில் முகினை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து அவரது தாயாரும் சகோதரியும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.