நடிகர் வடிவேலு தனியார் மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Friday,December 24 2021]

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் அவர் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் அவர் லண்டன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சமீபத்தில்தான் அவர் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்ப உனக்கு சந்தோஷமா? ஆனந்தக்கண்ணீருடன் மகளை கேட்கும் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது மகளிடம் இப்போது உனக்கு சந்தோஷமா? என போட்டியாளர் கேட்கும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கோடி பணம் இன்னும் கைக்கு வரல்ல, அதுக்குள் இப்படியா? விஜயலட்சுமி விரக்தி!

சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கான ஒரு கோடி ரூபாய் பரிசு பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்றும், அதற்குள் தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி

இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

விஜய்யுடன் இணைகிறாரா யுவன்ஷங்கர் ராஜா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பமான பள்ளி சிறுமி… தட்டிக் கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்ட அரசு மருத்துவர்!

சிவகங்கையில் அரசு மருத்துவராக பணியாற்றிவரும் ஃபரூக் அப்துல்லா என்பவர்,