close
Choose your channels

மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்: முடிந்தது ரெய்டு பிரச்சனை

Friday, February 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க வேண்டுமென கையோடு அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் இரண்டு நாட்களாக விஜய்யிடமும் அவரது குடும்பத்தினரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை செய்த நிலையில் நேற்று இரவு இந்த விசாரணை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் வீட்டிலிருந்து கணக்கில் வராத எந்த ஒரு ஆவணங்களும், ரொக்கமாக ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று தெரியவந்தது

இந்த நிலைய்ல் வருமான வரித்துறையினர் சோதனை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் விஜய் நெய்வேலியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் எந்தவொரு தடையும் இல்லை என்பதால் திட்டமிட்டபடி வரும் ஏப்ரலில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.