பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள்: ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக இயற்கை பேரிடரின் போது விஜய் ரசிகர்கள் தான் முதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ரசிகர்கள் 300 பேரை சென்னைக்கு வரவழைத்த விஜய் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் விலையில்லா விருந்து திட்டம் என்ற உணவு வழங்கும் திட்டத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இதற்காக பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் உதவி செய்கிறேன் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒத்துழைப்பு தருமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News

குஷ்புவின் மகளா இவர்? செம்ம கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

 நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. 

இந்த அரசியல்வாதியை ஃபாலோ செய்யுங்கள்.. த்ரிஷாவுக்கு மணிரத்னம் போட்ட உத்தரவு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்துள்ள

'மாஸ்டர்' படத்தில் 500, 'லியோ' படத்தில் 2000: லோகேஷ் கனகராஜின் மாஸ் பிளான்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'லியோ' படத்தின் அறிமுக பாடலில் 2000 நடன கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரியங்கா சோப்ராவின் 'சிட்டாடல்': முதல் எபிசோடே சரவெடி..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடித்த 'சிட்டாடல்' என்ற இணைய தொடர் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் முதல் எபிசோடே தெறிக்க வைக்கும்

ZEE5 ஓடிடியில்  'விடுதலை – பாகம் 1' : டைரக்டர்ஸ் கட் உடன் ஒளிபரப்பாகிறது.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான பிளாக்பஸ்டர் 'விடுதலை – பாகம் 1'  இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் ZEE5 இல் தமிழில் ஒளிபரப்பாகிறது.