close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பாவின் உடல்நிலை: தமிழ் நடிகர் தகவல்

Tuesday, August 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னியாகுமரி தொகுதி எம்பியும், பிரபல தொழிலதிபரும் தமிழ் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று வசந்தகுமார் எம்பியின் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தனது அப்பாவின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் வசந்த் கூறியதாவது:

அப்பாவிற்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து முடித்தவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அப்பாவை எடுத்து அம்மாவுக்கும் கொரோனா இருந்தது பரிசோதனை தெரிய வந்ததை அடுத்து இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் அப்பாவிற்கு சர்க்கரை நோய் தவிரை வேறு எந்த இணைநோயும் இல்லை. அவர் படிப்படியாக குணமாகி வந்த நிலையில் நேற்று திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மயக்க நிலையில் இருக்கிறார். வெண்டிலேட்டர் கண்காணிப்பில் இருந்தாலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்று நடிகர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.