கொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசை ஊக்குவிக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 50 லட்சம் அளித்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சியான் விக்ரம் தனது பங்காக ரூபாய் 30 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதனை அடுத்து விக்ரமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜீத் 25 லட்சம், ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், ஷங்கர் 10 லட்சம்ல் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி, ரஜினி மகள் குடும்பத்தினர் ஒரு கோடி என பல திரையுலக பிரமுகர்கள் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நேரத்தில் வேலை இழப்பா? நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ!

கடந்த 2019 டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய்த் தொற்றினால் பல லட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

கொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது? மருத்துவரின் அதிர்ச்சி வீடியோ!

இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது.

கொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் தற்போது இந்தியாவே தத்தளித்து வருகிறது.

கோடிக்கணக்கில் வாரிகொடுத்த அரசன்னே...? சத்தமில்லாமல் நடந்த காரியம்...!

முதல்வரின் கொரோனா நிதிக்கு அரசன் சோப் நிறுவனம், மிகப்பெரிய தொகையை  நிவாரணமாக அளித்துள்ளது.

இறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ!

கொரோனா வைரஸ்க்கு இன்று ஒரே நாளில் இயக்குனர் அருண்ராஜ் காமராஜரின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகிய இருவர் பலியாகியுள்ளது உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது