close
Choose your channels

ரூ.3 கோடி கடனுக்கு ரூ.4 கோடி வட்டி: விமல் புகாரால் தயாரிப்பாளர் மீது வழக்கு!

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூபாய் மூன்று கோடி வாங்கிய கடனுக்காக நான்கு கோடி ரூபாய் வட்டி கட்டியதாக தன்னிடம் கூறி தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது நடிகர் விமல் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த திரைப்படம் ’மன்னார் வகையறா’. இந்த படம் பண பிரச்சனை காரணமாக நின்று விட்டதை அடுத்து பைனான்சியர்கள் மூலம் படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க ரூபாய் 3 கோடி செலவானதாகவும், ஆனால் இந்த படம் 4 கோடி மட்டுமே வசூல் ஆனதாகவும், தயாரிப்பாளர் சிங்காரவேலன் விமலிடம் தெரிவித்துள்ளார். மேலும் வசூல் செய்த 4 கோடியும், இந்த படத்திற்கு கடனாக வாங்கிய ரூ.3 கோடிக்கு வட்டி செலுத்தவே சரியாகிவிட்டதாகவும் சிங்காரவேலன் விமலிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தயாரிப்பாளரின் அசல் 3 கோடி பணத்திற்காக அவருக்கு விமல் வேறு ஒரு படம் நடித்து கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ’மன்னார் வகையறா’ திரைப்படம் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை சேர்த்து மொத்தம் 8 கோடி வசூல் செய்ததாகவும் அந்த கணக்கை மறைத்து தன்னிடம் தயாரிப்பாளர் மோசடி செய்து உள்ளதாகவும், இதற்கு ஃபைனான்சியர்களும் உடந்தை என்றும், நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.