close
Choose your channels

கதை சொல்ல வந்தவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன்:  நடிகர் விமல் பரபரப்பு தகவல்

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னிடம் கதை சொல்ல வந்தவருக்கு ஐந்து லட்சம் கொடுத்தேன் என நடிகர் விமல் தான் ஏமாந்த கதையை செய்தியாளர்களிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விமல் நடித்த ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் விவகாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்காக வாங்கிய ஐந்து கோடியை நடிகர் விமல் திருப்பி தரவில்லை என கோபி என்ற தயாரிப்பாளர் சென்னை காவல் துறையில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் நடிகர் விமல் தனக்கு 1.50 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விளக்கமளித்த நடிகர் விமல், ‘மன்னார் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே தனது பெயர் என்றும் மற்றபடி அனைத்து கணக்கு வழக்குகள் அனைத்தையும் கோபி தான் பார்த்துக் கொண்டார் என்றும், படம் முடிந்த பிறகு 5 கோடி நஷ்டம் ஆகி விட்டது அந்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி தன்னிடம் கதை சொல்ல ஒரு இயக்குனரை கோபி அனுப்பி அவரிடம் ஐந்து லட்ச பெற்றுக் கொண்டதாகவும் அந்த இயக்குனர் கூறிய கதை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதை அடுத்து, ‘நான் கொடுத்த ஐந்து லட்சத்தை கொடுங்கள் என்று அந்த இயக்குனர் கேட்டதால் அதை நான்தான் கொடுத்தேன் என்றும் அந்த அளவுக்கு என்னை ஏமாற்றியுள்ளார்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கின்றேன் என்றும் விமல் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.