மதுரைக்காரங்க ரெண்டு விஷயத்துல மாறவே மாட்டாங்க: விஷால் பேட்டி


Send us your feedback to audioarticles@vaarta.com


மதுரைக்காரங்க ரெண்டு விஷயத்தில் மாறவே மாட்டாங்க என்றும், ஒன்று பாசம், இன்னொன்று உணவு என இன்று மதுரையில் விஷால் பேட்டி அளித்துள்ளார் .
நடிகர் விஷால், இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காக மதுரை சென்றிருந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
"மதுரை மக்களை நேரில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மதுரை மக்கள் 2 விஷயத்தில் மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம், இன்னொன்று உணவு,"என்று தெரிவித்தார்.
"எத்தனை வருடம் கழித்து வந்தாலும், அதே அன்பு, அதே பாசம் கொடுப்பார்கள். இங்கே இருக்கிற மக்கள், பல இயக்குனர்கள், ‘என்னுடைய சொந்த ஊர் மதுரை தான்’ என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்," என்றும் கூறினார்.
"இன்றைக்கு, என்னுடைய தம்பி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக வந்தேன். மதுரைக்கு வந்துவிட்டு மீனாட்சி அம்மனை பார்க்காமல் போனால் எப்படி? அதனால்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் வந்தேன்," என்றார்.
"2006ஆம் ஆண்டு ‘திமிரு’ படத்தின் படப்பிடிப்பு இங்கே தான் நடந்தது. இந்த இடத்திற்கு வரும்போது எல்லாம் நன்றாக உழைக்க வேண்டும், சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் வருகிறது. இங்கே இருக்கிற பெரியவர்கள் அனைவரும் அதை சொல்லும்போது எனக்கு ஊக்கம் ஏற்படுகிறது," என்றும் விஷால் தெரிவித்தார்.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது என்றும், அதை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார். எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments