அனிதாவின் அவசரம் முன்னுதாரணம் அல்ல: நடிகர் விவேக்

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்னொரு மரணம் நிகழ்ந்துவிட கூடாது என்றும் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த தவறான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'அனிதாவின் அவசரம் பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல என்றும் கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலையா? விமான ஓட்டி கனவு நிறைவேறாதவர்தான் அப்துல்கலாம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனிதாவின் சோகமுடிவு குறித்து அவர் குறிப்பிடுகையில், உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? என்றும், இதற்கு மேல் என்ன படிக்க? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது என்றும் விவேக கூறியுள்ளார்.

More News

இது ஜனநாயகம் அல்ல, போர்க்களம்: கபிலன் வைரமுத்து

ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை கல்வி. அந்த கல்வி மறுக்கப்படுவது அதுவும் ஒரு ஏழை மாணவிக்கு மறுக்கப்படுவது சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்கு சமம்...

பாலியல் தொல்லை: ஓடும் ரயிலில் இருந்து குதித்த சென்னை இளம்பெண்

ஆந்திராவில் ஓடும் ரயிலில் சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மூன்று நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் ரயிலில் இருந்து குதித்தார். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...

கருணாஸ் கார் கண்ணாடியை நொறுக்கிய மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

இதுவே இந்தியாவின் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் துன்பக்கடலில் மூழ்கடித்த நிலையில் நேற்று இரவே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்...

இன்னும் எத்தனை உயிர் வேணும், வயிறு எரிகிறது. கஸ்தூரி ஆவேசம்

மத்திய அரசின் அதிகாரம், மாநில அரசின் கோழைத்தனம் காரணமாக நீட் விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது...