close
Choose your channels

கேரள வெள்ளம்: சூர்யா-கார்த்தி செய்த மகத்தான உதவி

Saturday, August 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. குறிப்பாக இடுக்கி, ஆலுவா , பாலக்காடு மல்லப்புரம் மற்றும் வாயநாடு பகுதியில் வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டு சுமார் 20 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தின் நிவாரணப்பணிக்காக தமிழக மற்றும் புதுச்சேரி அரசு நிதியுதவி உள்பட தேவையான உதவிகள் செய்து வரும் நிலையில் தமிழக திரையுலகினர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர்களின் இந்த மகத்தான உதவிக்கு கேரள மக்கள் நன்றி கூறி வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.