close
Choose your channels

என் பெயருக்கு தளபதி விஜய் உயிர் கொடுத்த நாள் இன்று: தமிழ் நடிகர் டுவீட்!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் பெயருக்கு தளபதி விஜய் உயிர் கொடுத்த நாள் இன்று: தமிழ் நடிகர் டுவீட்!

தளபதி விஜய் குறித்து பெருமையாக பேசாத நடிகர்களே தமிழ் திரையுலகில் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தமிழ் நடிகர் சௌந்தரராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் தன்னைப் பற்றி கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 19-ஆம் தேதி பேசியது குறித்து நினைவு கூர்ந்ததோடு, அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் செளந்தர்ராஜா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இன்று ..! இதே நாள் போன வருஷம் செப்டம்பர் 19, 2019 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்., தளபதி விஜய் அண்ணா என் பெயருக்கு ஒரு உயிர் கொடுத்த நாள்..! என்றும் மறவேனோ இந்த நாளையும் என் அன்பு தளபதி விஜய் அண்ணனையும்..! என்று குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தின் ஆடியோ விழா என்பதும் இந்த விழாவில்தான் சௌந்தரராஜா குறித்து தளபதி விஜய் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் விஜய பேசியதாவது: ‘பிகில் படப்பிடிப்பின்போது ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். அவர் தான் சௌந்தர்ராஜன். அவரிடம் பேசிய போது அடிக்கடி அவர் பயன்படுத்தும் வார்த்தை ’மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்பதுதான். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். மேலும் அவர் நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இன்னும் சொல்லப்போனால் நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்’ என்று சௌந்தரராஜா குறித்து தளபதி விஜய் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்த வீடியோவும் செளந்தர்ராஜாவின் டுவிட்டும் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.