என் பெயருக்கு தளபதி விஜய் உயிர் கொடுத்த நாள் இன்று: தமிழ் நடிகர் டுவீட்!

தளபதி விஜய் குறித்து பெருமையாக பேசாத நடிகர்களே தமிழ் திரையுலகில் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தமிழ் நடிகர் சௌந்தரராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் தன்னைப் பற்றி கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 19-ஆம் தேதி பேசியது குறித்து நினைவு கூர்ந்ததோடு, அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் செளந்தர்ராஜா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இன்று ..! இதே நாள் போன வருஷம் செப்டம்பர் 19, 2019 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்., தளபதி விஜய் அண்ணா என் பெயருக்கு ஒரு உயிர் கொடுத்த நாள்..! என்றும் மறவேனோ இந்த நாளையும் என் அன்பு தளபதி விஜய் அண்ணனையும்..! என்று குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தின் ஆடியோ விழா என்பதும் இந்த விழாவில்தான் சௌந்தரராஜா குறித்து தளபதி விஜய் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் விஜய பேசியதாவது: ‘பிகில் படப்பிடிப்பின்போது ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். அவர் தான் சௌந்தர்ராஜன். அவரிடம் பேசிய போது அடிக்கடி அவர் பயன்படுத்தும் வார்த்தை ’மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்பதுதான். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். மேலும் அவர் நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இன்னும் சொல்லப்போனால் நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்’ என்று சௌந்தரராஜா குறித்து தளபதி விஜய் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்த வீடியோவும் செளந்தர்ராஜாவின் டுவிட்டும் தற்போது வைரலாகி வருகிறது

More News

ஐபிஎல் போட்டியில் மிஸ் ஆன மாயந்தி லாங்கர்: அவரே கூறிய காரணம்!

ஐபிஎல் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதும் அதைவிட முக்கியமாக தொகுப்பாளர்களின் தொகுப்புகள் மிக முக்கியத்துவம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

மிஷ்கினின் அடுத்த படம்: டைட்டில், நாயகி, இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பார், அருண் விஜய் நடிப்பார் என்று ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

சூரியின் ஆச்சரியத்தக்க மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் ஒருவர் நடிகர் சூரி என்பது தெரிந்ததே. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் அபுதாபியில் நடந்த முதல் லீக் போட்டியில் கடந்த ஆண்டில் சாம்பியன்

சூர்யாவின் அடுத்தடுத்த 4 படங்கள் குறித்த தகவல்!

சூர்யா நடித்துள்ள 38 ஆவது படம் சூரரைப்போற்று என்பதும் அந்த படம் ஓடிடியில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளிவர உள்ளது என்பதும் தெரிந்ததே.