close
Choose your channels

பல் மருத்துவரை மணக்கிறார் சரண்யா மோகன்

Monday, July 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமாகிய நடிகை சரண்யா மோகன், தமிழில் 'யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நாயகியின் தங்கையாக நடித்தார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழுவின் மூலம் ஹீரோயின் அந்தஸ்து பெற்று அதன் பின்னர் அழகர்சாமியின் குதிரை உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தார்.


இந்நிலையில் சரண்யா மோகன், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், மாப்பிள்ளை ஒரு பல்மருத்துவர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சரண்யா மோகனே தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவரான அரவிந்த கிருஷ்ணா என்பவருடன் தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போது சரண்யா மோகன், 'என்னை ஏதோ செய்துவிட்டாய்' என்ற தமிழ்ப்படத்திலும் ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்னர் இந்த மூன்று படங்களையும் முடித்துவிடுவார் என்றும் திருமணத்திற்கு பின்னர் நடிப்பை தொடர்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.