காதலித்து கர்ப்பமாக்கினார்: இயக்குனர் மீது நடிகையின் பகீர் புகார்!

  • IndiaGlitz, [Tuesday,December 01 2020]

இயக்குனர் ஒருவர் தன்னை இரண்டு வருடமாக காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் காவல் துறையில் இன்று அளித்த புகாரில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி என்பவர் தன்னுடன் இரண்டு வருடங்களாக பழகியதாகவும் பாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் இதனால் கடந்த ஜூலை மாதம் தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது கர்ப்பத்தை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய போது அவர் திருமணம் செய்ய மறுத்ததோடு, நண்பர்கள் முன்னிலையில் தனது நடத்தை குறித்து கேள்வி எழுப்பி அசிங்கப்படுத்தியதாகவும் இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நடிகையின் புகாரை அடுத்து காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். காஸ்டிங் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய தொலைக்காட்சி நடிகையால் தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான்: சூரியின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி என்பதும் அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைப்படமாகும் இந்தியாவின் தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை!

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய இந்தியாவின் தலைசிறந்த பெண் என்ற புகழ் பெற்ற உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

சந்தானம் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏ1'. இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று சந்தானத்திற்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஹோல்டியா நிறுவனத்தின் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

கேப்டன்ஷிப் டாஸ்க்: பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் குறும்படம்

நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் பாலாஜிக்கு ஏற்பட்ட அதிருப்தியை கேப்டன்