close
Choose your channels

காதலித்து கர்ப்பமாக்கினார்: இயக்குனர் மீது நடிகையின் பகீர் புகார்!

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஒருவர் தன்னை இரண்டு வருடமாக காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் காவல் துறையில் இன்று அளித்த புகாரில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி என்பவர் தன்னுடன் இரண்டு வருடங்களாக பழகியதாகவும் பாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் இதனால் கடந்த ஜூலை மாதம் தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது கர்ப்பத்தை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய போது அவர் திருமணம் செய்ய மறுத்ததோடு, நண்பர்கள் முன்னிலையில் தனது நடத்தை குறித்து கேள்வி எழுப்பி அசிங்கப்படுத்தியதாகவும் இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நடிகையின் புகாரை அடுத்து காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். காஸ்டிங் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய தொலைக்காட்சி நடிகையால் தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.