close
Choose your channels

பட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இருப்பதாக தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி, இந்தியத் திரையுலகில் மட்டுமன்றி, ஹாலிவுட்டிலும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இது குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதும் அவர் குற்றச்சாட்டுகளைக் கூறிய நபர்கள் அனைவரும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் நிலையில் இதுகுறித்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ’காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சமீபத்தில் பேட்டியளித்த போது அவரிடம் ’பட வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர கட்டாயப்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

திரை உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றார்கள் என்றும், சிலர் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார்கள் என்றும் ஆனால் சில அப்பாவி நடிகைகள் இதில் மாட்டி கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் நான் நல்ல வேளையாக எனது அதிர்ஷ்டம் காரணமாக இதுபோன்ற பிரச்சினையில் இருந்து தப்பினேன்’ என்றும் அதிதிராவ் ஹைத்ரி கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.