'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி

  • IndiaGlitz, [Friday,July 19 2019]

இன்று விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ரிலீஸ் ஆன நிலையில் அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு திரைப்படம் ரிலீஸ் செய்வதை 100% உறுதி செய்த பின்னரே முன்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் முன்பதிவு செய்துவிட்டு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் போது திடீரென காட்சிகள் ரத்து என கூறி ரசிகர்களை அலைக்கழிக்க வைப்பது மிகவும் தவறான செயலாகும் என்றும் ரசிகர்கள் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'ஆடை' படம் ரிலீஸ் ஆகாததற்கு இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு திடீரென ஏற்பட்ட பணபிரச்சனை தான் என்றும் இதனால் இந்த படத்தின் கேடிஎம் ரிலீஸ் ஆகவில்லை என்றும் அதனால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் இந்த படம் இன்று மதியத்திற்குள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் காலைக்காட்சி ரத்தானதால் வெகுதூரத்திலிருந்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பணம் மற்றும் நேரம் விரையம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் கோபம் கொண்டுள்ளனர். திட்டமிட்டபடி ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகாதது இது முதல் முறை அல்ல. கடந்த சில மாதங்களாகவே அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவது என்பது அடிக்கடி நிகழும் ஒரு வழக்கமாக இருக்கிறது. இதற்கு முன்னர் பல பிரபலங்களின் திரைப்படங்கள் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை!

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் அடைக்கப்பட்ட மீராமிதுன், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்

சூர்யா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். எதிர்கால சந்ததியினர் கற்கும் புதிய கல்வி கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பினார்.

மீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன், மிகச்சரியாக ஒவ்வொருவரையும் திட்டமிட்டு அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்க நரித்தனமான வேலைகளை செய்து வருகிறார்.

தமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி உள்பட பலர் திகில் படங்களில் நடித்து வரும் நிலையில் தமன்னா

கவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து நடந்து வருவது தெரிந்ததே. கவின் சாக்சியை லவ் பண்ணுகிறாரா? அல்லது லாஸ்லியாவை லவ் பண்ணுகிறாரா?