துன்பம் வரலாம்… போகலாம்… வேறலெவல் ரியாக்சனுடன் தத்துவம் பேசும் தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

தமிழ் சினிமாவில் “மைனா“ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். அதற்குப் பிறகு “தெய்வத்திருமகள்“, “வேட்டை“, “காதலில் சொதப்புவது எப்படி“, “‘தலைவா“, “வேலையில்லாப் பட்டதாரி“ போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதேபோல மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் பேசும்படியான பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் “ஆடை“ திரைப்படத்தில் நடித்திருந்த இவர் பல கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதற்குப் பிறகு ஆந்தலாஜி திரைப்படமான “குட்டி ஸ்டோரி“யில் நடித்திருந்த இவர் தமிழில் பெரிய அளவிற்கு கவனம் செலுத்தவில்லை. தற்போது வெப் சீரிஸ்களில் ஆர்வம் காட்டிவரும் நடிகை அமலாபால் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் “கடாவர்“ திரைப்படத்தில் தடயவியல் மருத்துவராக நடிகை அமலாபால் நடித்து வருகிறார். மேலும் “அதோ அந்த பறவை போல“. “ஆடுஜீவிதம்“ போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் ஒயின் கவுன் அணிந்திருக்கும் நடிகை அமலாபால் “வருத்தங்கள் வரலாம். வருத்தங்கள் போகலாம். இந்த நிமிடம் நம்மிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனவே கடவுள்களின் பானத்தை நீங்களே ஊற்றி யாரும் பார்க்காதது போல் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்“ என்று ஒரு பானத்திற்கு விளம்பரம் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை அமலாபாலின் ரியாக்ஷன் வேறலெவலாக இருக்கிறதே… என்று கமெண்ட் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

என்னை டீமில் சேர்க்காதீங்க… பாண்டியாவின்  திடீர் கோரிக்கைக்கு என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு

நீ சொல்வதை செய்ய முடியாது: கேப்டன் நிரூப் உத்தரவை எதிர்க்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி நிரூப் கேப்டனாக மாறியுள்ளார். 

மாரி செல்வராஜ் படத்தில் முதல்முறையாக வடிவேலு: ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'ஜெயில்' படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும்: வசந்தபாலன் பதிவு

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்! 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென் என்பதும் அதன் பின் அவர் விஜய் நடித்த 'பகவதி' செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில்