close
Choose your channels

மகனுடன் சென்னையில் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்: என்ன காரணம்?

Wednesday, October 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை எமி ஜாக்சன் இந்த ஆண்டு தீபாவளியை சென்னையில் கொண்டாடிய நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் சென்னையில் தீபாவளி கொண்டாடிய காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய ’மதராசபட்டணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு அவர் விஜய்யின் ’தெறி’ ரஜினியின் ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் திருமணமாகி இங்கிலாந்திலேயே செட்டிலாகி விட்ட எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அருண் விஜய் நடிப்பில் ஏஎல், விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அவர் சென்னைக்கு குடும்பத்துடன் வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் எமிஜாக்சன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள எமி ஜாக்சன் அதில் கூறியதாவது:

இந்த ஆண்டு தீபாவளியை இந்தியாவில் கொண்டாடியதை அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். அதிக அன்பு, அதிக ஒளி மற்றும் நன்றி உணர்வு நிறைந்த இந்த நாட்டில் தீபாவளி கொண்டாடுவதை நாங்கள் பெருமையுடன் கருதுகிறோம். இந்த அழகான நாட்டை நாங்கள் மிஸ் செய்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.