'கருணாஸ்' பட நாயகிக்கு கொரோனா: மும்பை மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Saturday,August 15 2020]

கருணாஸ் நடித்த ’அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் தற்போதைய லோக்சபா எம்பியுமான நடிகை நவ்நீத் கவுர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் நேற்று நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சரத்குமார் நடித்த ’அரசாங்கம்’ கருணாஸ் நடித்த ’அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும், தற்போதைய அமராவதி தொகுதி எம்பியுமான நவ்நீத் கவுர் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நவ்னீத் கவுர் உள்பட அவரது குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் திடீரென நவ்நீத் கவுருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

More News

7 வருடங்களுக்கு முன் எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை!

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அவர்தான் 'செல்பி'யை கண்டுபிடித்திருப்பாரோ? பூஜாகுமாரின் மலரும் நினைவுகள்

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'காதல் ரோஜாவே' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் நடிகை பூஜாகுமார் பிரபலமானது உலகநாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தில் தான்

தந்தை இறந்த செய்தி தெரிந்தும், சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும்,

'சுதந்திரம்' குறித்து ஓவியாவின் பரபரப்பான டுவீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதாவது ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.